வெளி மாநில நீதிபதிகளுக்கு வக்கீல்கள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது என்று சென்னைவழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எலிப்பே தர்மாராவ் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெளி மாநில நீதிபதிகளை நியமிக்கக் கூடாது என்று சென்னைவழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து சங்கத் தலைவர் தமிழ்மணி கூறுகையில், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வெளிமாநில நீதிபதிகள்உள்ளனர். தற்போது ஆந்திராவைச் சேர்ந்த எலிப்பே தர்மாராவ் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு வெளி மாநிலநீதிபதி வரவுள்ளதாகத் தெரிகிறது.
இப்படியே வெளி மாநில நீதிபதிகளை நியமித்து வந்தால், உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கைவெகுவாகக் குறைந்துவிடும். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
மேலும், வெளி மாநில நீதிபதிகளுக்கு தமிழ் தெரியாது. இதனால் தமிழில் உள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டியுள்ளது. இதனால் பொது மக்களுக்குத்தான் அதிக பணம் செலவாகிறது.
எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளி மாநில நீதிபதிகளை நியமிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தமிழ்மணி.