For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை போர்க் கப்பல் மீது புலிகள் தற்கொலை தாக்குதல்: 15 கடற்படையினர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

வட-கிழக்குப் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை கடற்படையின் கப்பல் மீதுவிடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

இன்று காலை திரிகோணமலையில் இருந்து கிளம்பிய இரண்டு கப்பல்களில் ஒன்றின் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். மீன்பிடிப்படகில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு இந்தக் கப்பல் மீது புலிகள் மோதித் தகர்த்ததாகத் தெரிகிறது.

இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தான் நடத்தியதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறினார்.கொல்லப்பட்டவர்களில் 2 பேர் கடற்படை அதிகாரிகள் என்றும் 13 பேர் வீரர்கள் என்றும் அவர் கூறினார்.

கொல்லப்பட்டவர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் முதல் இரு தரப்பினருக்கும்இடையே மீண்டும் தொடங்கியுள்ள மோதலில் இதுவரை 115 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் கட்டப்பட்ட துவாரோ ரக போர்க் கப்பல் உள்பட இதுவரை 3 முறை இலங்கை போர்க் கப்பல்கள் மீது புலிகள்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X