For Daily Alerts
Just In
கோவில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் திருக்கோவில்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுதும் உள்ள, இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும்திருக்கோவில்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.அதன்படி, 20 வருடங்கள் வரை பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களுக்குகுறைந்தது ரூ. 750 ஓய்வூதியமாக கிடைக்கும்.
10 வருடங்கள் வரை பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களும் ஓய்வூதியம் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.இதுதவிர, சிறு கோவில்களில் பணியாற்றி வருபவர்களுக்கு நிதித் தொகுப்பை உருவாக்கி அவர்களுக்கு மாதம் ரூ. 750ஓய்வூதியமாக கிடைக்க வகை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 9873 திருக்கோவில் ஊழியர்கள் பலன் அடைவர் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
Comments
Story first published: Saturday, January 7, 2006, 5:30 [IST]