ஏட்டையாவை அறைந்த பெண் எஸ்ஐ!

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

21 வருட பணி அனுபவம் வாய்ந்த தலைமைக் காவலர் ஒருவரை, பயிற்சியில் இருக்கும் ஒரு பெண் சப்- இன்ஸ்பெக்டர்கன்னத்தில் அறைந்தார். இதனால் கடலூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடி வாங்கிய தலைமைக் காவலரும், அடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காலவராக இருந்தவர் அன்பழகன். 21 வருடங்களாக காவல்துறையில்பணியாற்றி வருகிறார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் மூத்த காவலர் அன்பழகன் தான். இக்காவல் நிலையத்தில்சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் செந்தில் விநாயகம்.

சில நாட்களுக்கு முன்பு, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரை ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டியிருந்தது. இந்தப் பணியை அன்பழகனிடம் ஒப்படைத்தார் செந்தில் விநாயகம். கூடவே, வேறு இரு கைதிகளையும்அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ராஜகோபால் மிகவும் மோசமான ஆள் என்பதால் கூடுதலாக சில காவலர்களை அனுப்புமாறு செந்தில் விநாயகத்திடம்அன்பழகன் கோரியுள்ளார். ஆனால் அதை கேட்க மறுத்த செந்தில் விநாயகம், நான் சொல்வதைக் கேளுடா என்று கூறியுள்ளார்.(காவல்துறையில் கீழே பணி புரிபவர்களை வாய்யா, போய்யா, இவனே, அவனே என்று அழைப்பதெல்லாம் சகஜமாகவேஇருந்து வருகிறது)

இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் சார், நான் 21 வருடங்களாக போலீஸ்காரனாக உள்ளேன். இப்படி மரியாதைக்குறைவாக பேசாதீர்கள் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த சப்- இன்ஸ்பெக்டர், அன்பழகனை தாறுமாறாகத்திட்டியுள்ளார். பதிலுக்கு அன்பழகனும் சப்தம் போட்டுள்ளார்.

அப்போது செந்தில் விநாயகத்தின் அருகில் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் எழிலரசி கோபத்துடன் பாய்ந்து வந்து, அன்பழகனின்கண்ணத்தில் பளார் என அறைந்துள்ளார். இத்தனைக்கும் இந்த எழிலரசி பயிற்சியில் தான் இருக்கிறார்.

தனக்கு வேண்டியவரான செந்தில் விநாயகத்துக்கு ஆதரவாகப் பாய்ந்து வந்திருக்கிறார் எழில்.

பெண் எஸ்.ஐ, அதுவும் ஒரு பயிற்சி எஸ்.ஐ. தன்னை அறைந்ததால் நிலைகுலைந்த அன்பழகன் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அவரது கண்கள் கலங்கிவிடஸ காவல் நிலையமே ஸ்தம்பித்திருக்கிறது.

இந்தத் தகவல் டி.எஸ்.பி. பெரோஸ் கானுக்குப் பறந்தது. அவர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். நடந்த சம்பவம்குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பன்னீர் செல்வத்திற்குத் தெரிவித்தார்.

நடந்ததை விசாரித்த எஸ்.பி, தலைமைக் காவலரை கை நீட்டி அறைந்த எழிலரசியை ஆயுதப் படைக்கும், மேலதிகாரியைஎதிர்த்துப் பேசினார் என்று சொல்லி ஏட்டையா அன்பழகனை கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றுமாறு உத்தரவிட்டார். அதன்படிஇருவரும் மாற்றப்பட்டனர்.

அனுபவம் வாய்ந்த தலைமைக் காவலரை கை நீட்டி அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது கடலூர் காவல்துறைகொந்தளிப்புடன் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+