For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மதுரையை தாக்கத் திட்டமிட்ட 3 தீவிரவாதிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் ஐஐஎஸ்சி தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூர், ஹைதராபாத், சென்னை, டெல்லி, கோலார் ஆகிய இடங்களில் சிலமுக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்தது வருகிறது.

இந் நிலையில் மும்பையில் 3 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள்காஷ்மீரில் உள்ள சோப்பூர், பாரமுல்லா மாவட்டங்களை சேர்ந்த குர்ஷித்கானி லோன் (வயது 29), அர்ஷத்குலாம் பத்ரு உசேன்(வயது 27), ரம்சான் வகாப் காஜி (வயது 50) என்று தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 6 எலக்ட்ரானிக் சர்க்யூட்கள், 20 டெட்டனேட்டர்கள், 5 டைம் பாம் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன கைத்துப்பாக்கி ஒன்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இவை தவிரவெடி பொருட்களும் பிடிபட்டன.

3 தீவிரவாதிகளிடமும் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் நாடெங்கும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி டெல்லி, சண்டிகார், புனே, நொய்டா, குர்காவ்ன், இந்தூர்,விசாகப்பட்டினம், மைசூர், மதுரை ஆகிய நகரங்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதிகள் உறுதிப்படுத்தினர்.

மதுரையை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறிவைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். எனவே மதுரை போலீார்அதிகபட்ச உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X