பொங்கல்: தமிழகத்தில் சிறப்பு ரயில்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய நகர்களுக்கு சிறப்புரயில்களை இயக்க ரயில்வே இணை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும்செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, வரும் 10ம்தேதி சிறப்பு ரயில் விடப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில் கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு, தாம்பரம்,மாம்பலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு, வரும் 16ம் தேதி சிறப்பு ரயில் இரவு 11 மணிக்கு புறப்படுகிறது. இந்தரயில் மறு நாள் காலை மதுரையை சென்றடைகிறது.

மேலும் மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு, 15ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 15ம் தேதிமாலை 6 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

இதே போல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 16ம் தேதி இரவும், நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 17ம் தேதிஇரவும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சிக்கு சென்னையில் இருந்து 18ம் தேதி இரவு சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.

இதையடுத்து சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் 11ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.திருவனந்தபுரத்தில் இருந்து மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரலுக்கு 15ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னகரயில்வே செய்தி குறிப்பு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+