For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாரி-ஜீப் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை, திருமங்கலம் அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் 5 அய்யப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் மெஹபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 அய்யப்ப பக்தர்கள், ஜீப் மூலம் சபரிமலைக்கு சென்றனர். அங்குதரிசனத்தை முடித்து விட்டு அனைவரும் மதுரை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே மறவன்குளம் என்ற இடத்தில் ஜீப் வந்தபோது, எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் ஜீப்தீப்பிடித்துக் கொண்டது.

இதில் ஜீப்பில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தஅனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X