கூட்டணி ஆட்சி குறித்து திமுகவுடன் பேசுவோம்: காங்
டெல்லி:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து திமுகவுடன் உரிய நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் பேசும் என்றுதமிழகத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் டெல்லியில் ஆலோசனைகளைத்தொடங்கியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், தமிழக காங்கிரஸ் கட்சியில்கோஷ்டிகள் உள்ளதை நான் மறுக்கவில்லை. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் இது சாதாரணம். ஆனால் தேர்தல் நேரத்தில்அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக சுமூகமானமுறையில் பேச்சுவார்த்தை நடைபெறும்.
காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கேற்ப தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். இதற்காக யாருடைய தயவையும் காங்கிரஸ்எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டுமோ அவை நிச்சயம் கிடைக்கும்.
தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து இப்போது எதுவும் நாங்கள் பேசவில்லை. உரியநேரத்தில் இது குறித்து காங்கிரஸ் மேலிடம் பேசும் என்று தெரிவித்தார் மொய்லி.
கூட்டணி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்கள் சமீப காலமாக பேசி வந்த நிலையில்மேலிடப் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும் அந்தக் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளதால் திமுக வட்டாரத்தில்சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.