அதிகாரிகள் இடமாற்றத்தில் சிக்கல்: நரேஷ்குப்தா
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டனின் உத்தரவுப்படி அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் சிறு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகதமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
கோவை,மதுரை,சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியதலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன், மதுரையில் பேட்டி அளிக்கையில், ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேல்பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர், சொந்த மாவட்டத்தில் எந்த அதிகாரியும் பணி புரிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் நரேஷ்குப்தா பேசுகையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவுப்படிஅதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி அதிகாரிகளை மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவேஅவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாற்றப்படுவர்.
இதுதொடர்பான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும். மழை பாதிப்பில்லாத பகுதிகளில் நாளை வரைவு வாக்காளர்பட்டியில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் அதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி வாக்காளர் பட்டியல்பிப்ரவரி மாத இறுதிக்குள் வெளியாகி விடும் என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications