யானையிடம் சிக்கிய நீலகிரி கலெக்டர் குடும்பம்!
பவானி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் காரை காட்டு யானை ஒன்று துரத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஆட்சித் தலைவர் விஜயக்குமார், தெங்குமரஹுடா என்ற இடத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து காண்டார். விழா முடிந்ததும்,தனது மனைவி, 8 மாதக் கைக்குழந்தையுடன் காரில் கிளம்பினார்.பவானி அருகே காட்டுப் பாதையில், நடு ரோட்டில் ஒரு காட்டு யானை அந்தக் காரை வழிமறித்தது. இதனால் கார்நிறுத்தப்பட்டது. காரின் என்ஜினை ஓட்டுனர் ஆப் செய்து விட்டார்.
காருக்குப் பின்னால் ஒரு யானைக் கூட்டம் மெல்ல சாலையை கடந்து கொண்டிருந்தது. இதனால் முன்னும் போகமுடியவில்லை,பின்னாலும் போக முடியவில்லை.
ஒரு வழியாக சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் வழிமறித்த யானை மெல்ல திரும்பி காட்டுக்குள் போனது. இதையடுத்துகார் மீண்டும் கிளம்பியது. இதைப் பார்த்த அந்த யானை மீண்டும் சாலைக்கு ஓடி வந்து காரைத் துரத்தத் தொடங்கியது.
காரை அங்கும் இங்கும் ஓட்டியபடி டிரைவர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனாலும் யானை தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தது.
இந் நிலையில் அந்த சாலை வழியாக ஒரு பேருந்து வந்தது. காரை யானை துரத்துவதைப் பார்த்த பஸ் டிரைவர் ஹார்ன் அடித்தபடியானையை நோக்கி பஸ்ஸை ஓட்டினார்.
இதைக் கண்டு பயந்த யானை மீண்டும் காட்டுக்குள் ஓடி விட்டது. இதையடுத்தே கலெக்டரின் கார் தப்ப முடிந்தது.