ஹஜ் நெரிசல்: பலி 362- இந்தியர்கள் 28 பேர்
மெக்கா:
மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 362 புனித யாத்ரீகர்கள் பலியாயினர். இதில் 28 பேர் இந்தியர்கள் ஆவர்.
மினாவில் உள்ள புனிதத் தலத்தில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றனர்.அப்போது திடீரென அந்த இடத்தின் அருகே உள்ள பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.லட்சக்கணக்கான மக்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறு விழுந்ததில் 362 பேர் பலியாயினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 15பெண்கள் உள்பட 28 பேரும் அடக்கம். மேலும் 15 இந்தியர்களும் காயமடைந்துள்ளதாக மினாவில் உள்ள இந்திய கவுன்சல்ஜெனரல் யூசுப் சயீத் தெரிவித்துள்ளார்.
பலியான இந்தியர்களில் 12 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர்ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ராஜஸ்தானையும், 2 பேர் மத்தியப் பிரதேசத்தையும்சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
பலியானவர்களில் மேலும் 2 பேர் செளதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் ஆவர்.
ஹஜ் கமிட்டி மூலமாகச் சென்று இச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடுவழங்கும் என ஹஜ் கமிட்டி தலைவர் தன்வீர் அகமத் தெரிவித்துள்ளார்.
சூரிய அஸ்தமானத்துக்குள் சாத்தான்கள் என்று கருதப்படும் தூண்கள் மீது கல் எறிந்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் மக்கள்வேகமாக முன்னேறியபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
கருணாநிதி இரங்கல்:
ஹஜ் நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் இறந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் யாத்திரையில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின்போது, ஏற்பட்டகூட்ட நெரிசலில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
நெஞ்சை நெகிழ வைத்தது அந்த செய்தி. தங்களது குடும்பத்தினரை, உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனதுஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications