போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் என்ற இன்னொரு நிகழ்வோடுஇனிதுற முடிகிறது.
காணும் பொங்கல் என்பது உற்றார், உறவினர்கள், நண்பர்களைக் கண்டு இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் காண்பது என்ற பொருளில் இன்றுபார்க்கப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் வேறு.
தமிழ்க் கனிகளான முக்கனிகளோடு பல்வேறு கனிகளையும், மலர்களையும் ஒரே இடத்தில், கண்டு தரிசித்தால் அந்த ஆண்டு முழுவதும் உவகை பொங்கும்என்ற நோக்கில்தான் காணும் பண்டிகை அதாவது கனி காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று அது வேறு பொருளில்கொண்டாடப்படுகிறது.
இருப்பினும் கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் இது கனி காண் பண்டிகையாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.