மீனாட்சி கோவிலில் கத்தியுடன் நுழைந்த வாலிபர்!
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பெரிய பட்டாக்கத்தியுடன் புகுந்த வாலிபர் அர்ச்சகர்களையும், பக்தர்களையும்மிரட்டினாார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது நிரந்தரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவில் நுழைவாயில்கள் மற்றும் கோவிலுக்குள் பல இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள்பொருத்தப்பட்டுள்ளன.கோவிலுக்கு வெளியேயும், உள்ளேயும் ஏராளமான போலீஸார் ரோந்து சுற்றியும் வருகின்றனர். இப்படிப் பலத்த பாதுகாப்பின் கீழ்இருக்கும் கோவிலில் பட்டாக் கத்தியுடன் ஒரு வாலிபர் நுழைந்து பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டார்.
கோவிலுக்கு வந்த ஒரு வாலிபர் நேராக சுவாமி சன்னதிக்கு சென்றார். திடீரென தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபெரிய பட்டாக் கத்தியை எடுத்த அவர் கோவிலில் அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்கள், பக்தர்களை நோக்கி கத்தியைசுழற்றிக் காட்டி பயமுறுத்தினார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த பட்டாக் கத்தி பறிமுதல்செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த நபர் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த பாலருகன் என்பதும், குடித்து விட்டு கோவிலுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. தத்தனேரி சுடுகாட்டில் அவர் வெட்டியானாக வேலை பார்த்து வருகிறார்.
மிக பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஒரு நபர் நல்ல குடிபோதையில், பெரிய பட்டாக்கத்தியுடன் நுழையும் அளவுக்கு போலீஸார் அஜாக்கிரதையாக இருந்துள்ளதாக பக்தர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குடித்து விட்டு வருபவனை பார்த்தாலே தெரியுமே, அப்படி இருந்தும் இவனை எப்படி போலீஸார் உள்ளே நுழைய விட்டார்கள்என்ற கேள்வி எழுந்துள்ளது. கோவில் பாதுகாப்பை உருப்படியான போலீசாரை வைத்து பலப்படுத்த வேண்டும் என்றகோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications