தமிழக தலைமை தகவல் அதிகாரி நியமனம்
சென்னை:
தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தமிழக தகவல் கமிஷனின் தலைமை தகவல் அதிகாரி மற்றும் இரண்டு மாநில தகவல்அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் உரிமைச் சட்டப்படி மாநில அரசின் தகவல்களை வெளியிடவும் அவை தொடர்பானமுறையீடுகளை ஆய்வு செய்யவும் மாநில தகவல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.இந்த கமிஷனின் தலைமை தகவல் அதிகாரி மற்றும் இரண்டு மாநில தகவல் அதிகாரிகளை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா,எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், நிதியமைச்சர் பொன்னையன் ஆகியோர் கொண்ட குழு கடந்த மாதம் கூடியது. இக்குழுஎடுத்த முடிவின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் நாரயணன் நேற்று உத்தரவுபிறப்பித்தார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக தகவல் கமிஷனின் மாநில தலைமை தகவல் அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன்நியமிக்கப்படுகிறார். இவர் உணவுத்துறை செயலராக இருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றவர்.
இதேபோல, மாநில தகவல் கமிஷனர்களாக தமிழக அரசின் பொதுத்துறைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஜி ராமகிருஷ்ணன்மற்றும் எரிசக்தித் துறை செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஆர்.ரத்தினசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.