எம்எல்ஏக்களை வாங்கும் அதிமுக: ஜி.கே. மணி
சென்னை:
பாமகவில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் யற்சிகள் பலிக்காது. இந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் என்று பாமகஎம்.எல்.ஏ. விலகல் குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாமகவின் அந்தியூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.கிருஷ்ணன் திடீரென நேற்று கட்சியிலிருந்து விலகி, முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்த அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாமக வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.பாமக எம்.எல்.ஏ. விலகலுக்கு அதிமுகவே காரணம், இதைக் கண்டு பயந்து போய் விட மாட்டோம் என்று பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வெள்ளத்தில் கரையேற கூட்டணிக்குயாரேனும் கிடைக்க மாட்டார்களா? என்று அதிமுக வலை வீசிப் பார்த்தது.
யாரும் சிக்கவில்லை என்றதும் கூட்டணிக்கு வராத கட்சிகளிலிருந்து ஆட்களை இழுப்பது என்ற தங்களது வேலையைத்தொடங்கியிருக்கிறார்கள்.
கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக விரோதச் செயலில் அதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.இதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமகவைச் சேர்ந்த ஓரிரு சபல புத்திக்காரர்கள் இவர்களிடம் சிக்குவதுண்டு. இப்படி ஓரிருவர்செல்வதால் கட்சியின் ஆதரவும், செல்வாக்கும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டதே இல்லை என்பதை கடந்த கால தேர்தல்கள்நிரூபித்து வருகின்றன.
தன நபர்கள் விலை போகலாம், ஆனால் கட்சியின் செல்வாக்கு குறையவில்லை. மாறாக தொடர்ந்து வளர்ச்சி கண்டுதான்வருகிறது. கட்சியில் இருந்து விலகிப் போனவர்கள், அரசியலில் வாழ்விழந்து தவித்து நிற்பதையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
இப்போதும் ஒருவர் சென்று விட்டதால் பாமக எந்த வகையிலும் பாதிக்கப்படாது. செல்வாக்கு கரையாது, குறையாது. இந்தசலசலப்புகளை கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று கூறியுள்ளார் மணி.












Click it and Unblock the Notifications