கையை கடிக்காத கரும்பு
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கான லாரிகளில் கரும்புகள்வந்து குவிந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்றே விலை குறைவாக இருப்பதால் மக்கள் கரும்புகளைசந்தோஷத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
சனிக்கிழமை பொங்கல் திருவிழா. இதையொட்டி மஞ்சள் கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொங்கல் சம்பந்தப்பட்ட பொருட்களின்விலை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மஞ்சள் கிழங்கு விளைச்சல் பெரிய அளவில் இல்லை. காரணம், கன மழைகாரணமாக மஞ்சள் செடிகள் அழுகிப் போய் விட்டதால் மஞ்சளுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டு மஞ்சள் கிழங்கு ரூ. 80க்கு விற்கப்படுகிறது. ஆனால் தேங்காய் விலை சற்று பரவாயில்லை. தேங்காய் உற்பத்தி இந்தஆண்டு அதிகம் இருப்பதால், குறைந்த விலைக்கு தேங்காய்கள் கிடைக்கின்றன. நடுத்தர ரக தேங்காய் ரூ. 3க்கும், சற்றேபெரிதான தேங்காய் 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரையிலும் கிடைக்கிறது.
பனங்கிழங்கு விற்பனையும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. ஒரு கட்டு (அதாவது 15 கிழங்கு இருக்கும்) பனங்கிழங்கு 10ரூபாய்க்குக் கிடைக்கிறது.
பூ வியாராமும் கன ஜோராக நடந்து வருகிறது. பூக்களின் விலையில் இந்த ஆண்டு பெரிய உயர்வு எதுவும் இல்லை. பொங்கல்பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்புதான் இந்த ஆண்டு எக்குத்தப்பாக வந்து குவிந்துள்ளது.
ஆயிரக்கணக்கான லாரிகளில் கரும்பு வந்து குவிந்து வருகிறது. கரும்பு இல்லாமல் பொங்கலே கிடையாது என்பதால்குடும்பத்தோடு வந்து கட்டுக் கட்டாக கரும்புகளை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டை விட 50 ரூபாய் குறைத்து இந்த ஆண்டு கரும்பு விற்கப்படுகிறது. 25 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ 100க்குக்கிடைக்கிறது. பெரிய கரும்பாக இருந்தால் கட்டு ரூ. 150 வரை விற்கிறது. சிறிய கரும்பாகஇருந்தால் 50 ரூபாய்க்கும்கிடைக்கிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்துள்ள கரும்புகளை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்கிறார்கள்.
பொருட்களின் விலையில் பெரிய உயர்வு இல்லாததால்,தித்திக்கும் பொங்கலை, இந்த ஆண்டு பொதுமக்கள் சந்தோஷத்துடன்கொண்டாடலாம்.












Click it and Unblock the Notifications