அரக்கோணத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. ஆற்றில் இருந்து இது வரை 8 பேரின்உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சாவு எண்ணிக்கை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அரக்கோணத்தில் அரசு பேருந்து ஒன்று கல்லார் ஆற்றில் கவிழ்ந்து பயங்கரவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பல பேர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லார் ஆற்றுக்கு அருகே வரும் போது பஸ் டயர் வெடித்து, ஆற்றின் தடுப்புச் சுவற்றில் மோதி பஸ் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications