இலவச வேட்டி, சேலை விநியோகம்
சென்னை:
சென்னை மற்றும் தமிழகத்தின் நகர்ப் புறப் பகுதிகளைத் தவிர கிராமங்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை விநியோகம்பொங்கல் தினம் முதல் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவித்தது.மொத்தம் 3.28 கோடி பேருக்கு இவை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.அதன்படி தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி பொங்கல் தினத்தன்றுதொடங்கியது. மழை, வெள்ள கூட்ட நெரிசல் பலி சம்பவத்தின் எதிரொலியாக, மிகுந்த முன்னேற்பாடுகளுடனும், பலத்தபாதுகாப்புடனும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் கடைகளிலேயே வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகம் கூட்டம் சேரவிடாமல் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தினசரி 100 பேருக்கு மட்டுமே வேட்டி, சேலை விநியோகம்செய்யப்படுகிறது.
சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதிகளில் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தப் பணிதொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.