For Daily Alerts
Just In
டாண்டன் இன்று சென்னை வருகை
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் இன்று மாலை சென்னை வருகிறார். நாளை புதுவை, காரைக்காலில் அவர் தேர்தல்ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டாண்டன் தமிழகம்வந்திருந்தார். முதல் கட்ட ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் மீண்டும் இன்று மாலை சென்னைவருகிறார்.
நாளை காலை புதுவை செல்லும் டாண்டன் அங்கு புதுவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கிறார். பின்னர்காரைக்காலுக்கு செல்லும் அவர் அங்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து நாளை மாலை சென்னை திரும்பும் டாண்டன், மறுநாள் காலை சென்னையில் தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்துமீண்டும் ஆய்வு நடத்துகிறார். இதன் பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.
Story first published: Sunday, January 15, 2006, 5:30 [IST]