For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை ஜல்லிக்கட்டு: 80 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

பொங்கல் திருநாளையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 80 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பொங்கல் பண்டிகை தமிழம் முழுவதும் சனிக்கிழமை படு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்குமக்கள் உற்சாகத்துடனும், பழம்பெருமை மாறாத வகையிலும் சிறப்பாக கொண்டாடினர்.

பொங்கலையடுத்து தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் தொடங்கியுள்ளன. மதுரைஅவனியாபுரத்தில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மதுரை, ஆணையூர், சமயநல்லூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. பெரும் திரளான மக்கள் இந்த ஜல்லிக்கட்டைப் பார்வையிட குவிந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டில் முரட்டுக் காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள் 80 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாகஅரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X