திருவள்ளுவர் தினம்: வள்ளுவர் சிலைக்கு மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குதலைவர்கள், தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் பிறப்பைக்குறிக்கும் வகையில் வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட தற்போதைய ஆங்கிலஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இன்று திருவள்ளுவர் ஆண்டு 2037பிறக்கிறது.இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவள்ளுவர் விருதுகள்வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications