ஆயிரம் பிறை கண்ட வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆயிரம் பிறை கண்டவர் என்ற பெருமையைப் பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லியில் பாராட்டு விழாநடத்தப்பட்டது.
பிரதமர் வாஜ்பாய் கடந்த டிசம்பர் 25ம் தேதி தனது 81வது பிறந்த நாளைக் கொண்டாடினார். வாஜ்பாய் தனது வாழ்நாளில்நேற்றுடன் (சனிக்கிழமை) 1000 பிறைகளைக் கண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு டெல்லியில் பாராட்டு விழாநடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 1000 பிறைகண்ட வாஜ்பாயை அனைவரும் புகழ்ந்து பேசினர்.












Click it and Unblock the Notifications