செயற்கைகோள் மூலம் ஆசிரியர் பயிற்சி
தேனி:
துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு செயற்கைகோள் மூலம் பயிற்சி, அண்ணா பல்கலைகழகத்தில் ஜனவரி 20ம்தேதி துவங்க உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான பாடதிட்டத்தில், கற்றல் கற்பித்தல் பொருட்கள்தயாரிப்பு பயிற்சியில் சிறந்த செயல்முறை விளக்கங்கள் மாவட்டம் தோறும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பான பயிற்சி, சென்னை அண்ணா பல்கலைகழகம் வாயிலாக செயற்கைகோள் மூலம் ஒளிபரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. முதல் ஒளிபரப்பு ஜனவரி 20ல் ஒளிபரப்பாகிறது.
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கைகோள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவது இதுவேமுதன் முறையாகும்.
தேனி மாவட்ட கருத்தாளர்களால் தயாரிக்கப்பட்ட 4 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்ட செயல்முறை விளக்கங்கள்முதலாவதாக ஒளிபரப்பில் இடம்பெறுகிறது. இதற்காக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் கொண்ட கருத்தாளர்கள் மற்றும்வல்லுனர் குழு, ராமச்சந்திரன் என்பவர் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழத்திற்கு சென்றுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 25 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். தேனி மாவட்டத்தில்,உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், செயற்கைகோள் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.