ஜெ சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி பச்சாபுரே திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வரும் பெங்களூர் தனி நீதிமன்றத்தின் நீதிபதி பச்சாபுரே திடீரெனமாற்றப்பட்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி. தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாகசொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி ஏ.எஸ். பச்சாபுரே விசாரித்து வந்தார். இந்த நிலையில் நீதிபதி பச்சாபுரே திடீரென மாற்றம்செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பச்சாபுரேவிற்கு பதிலாக புதிய நீதிபதியாக ஏ.டி.முனோலி நியமிக்கப்பட்டுள்ளார். பச்சாபுரே பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஜெயலலிதா உள்பட 5 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு 21ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications