தென் ஆப்பிரிக்காவில் இந்திய தம்பதி கொலை
Subscribe to Oneindia Tamil
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் இளம் இந்தியத் தம்பதி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
டர்பன் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஈஷோ பகுதியில் வசித்து வந்த இந்தியத் தம்பதி பியாஸ் மோடாலா (வயது 22),அவரது மனைவி தஹிரா (வயது 21). இவர்கள் செல்போன் விற்பனை மையம் வைத்திருந்தனர்.இவர்களது கடைக்கு வந்த விஷமிகள் சிலர் கடையை பூட்டிவிட்டு, கடை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.
இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய இளம் இந்திய தம்பதியர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியர்களை குறி வைத்து தாக்குவதுமற்றும் வழிப்பறியில் ஈடுபவடுவது போன்ற சம்பவங்கள் டர்பனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி நடந்து வருவதாக அங்குவசிக்கும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications