நுழைவு தேர்வு ரத்து செய்ய சட்ட மசோதா
சென்னை:
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வகை செய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது, பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக சட்டசபையில் இன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவை மாநில கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
இதில், மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் படிக்காத மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மாநில அரசின் கல்வித் திட்டத்தில் படிப்பவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:
இதற்கிடையே சட்டமன்றத்தில் இன்று நடந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்காமல் எதிர்க் கட்சிகள்அனைத்தும், பாஜக தவிர, கூண்டோடு வெளிநடப்பு செய்தன.
நேற்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று விவாதம் நடந்தது. வழக்கமாக பட்ஜெட்டை எதிர்க் கட்சியினர்படித்துப் பார்த்து விவாதத்தில் ஈடுபட ஒரு நாள் அவசாகம் தரப்படும், ஆனால் இம்முறை பட்ஜெட்டைப் படிக்கவே அவகாசம்தராமல் விவாதம் நடத்தப்படுவதாகக் கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.