துரைமுருகன் ஆசையை நிறைவேற்றிய காளிமுத்து
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர்
நீதிமன்றம் குறித்து தெரிவித்த கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எஸ்.ஆர்.பி.பேசுகையில், சிறுசேரி நில விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்து ஜெயலலிதாவும் சில கருத்துக்களைக் கூறினார். முதல்வரின் பேச்சை ஆட்சேபித்து எஸ்.ஆர்.பி. திரும்பவும்பதில் அளிக்க முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, நீதிமன்றம் தொடர்பாக பேசிய அழைத்தையும் அவைக் குறிப்பிலிருந்துநீக்குவதாக அறிவித்து பிரச்சினையை அத்துடன் முடித்தார்.
தொடர்ந்து காளிமுத்து பேசுகையில், எஸ்.ஆர்.பி. மற்றும் முதல்வர் ஆகியோர் நீதிமன்றம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இடம்பெறாது. முதல்வரின் பேச்சையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதால் திமுக உறுப்பினர் துரைமுருகன் மிகவும்திருப்தியுடன் இருப்பார் என்று நினைக்கிறேன் என சிரித்தபடி கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், இந்த சட்டசபையில், எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கள்அனைத்தும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன. ஆளுங்கட்சியினர் பேசுவதை சபாநாயகர் நீக்குவதில்லை. நடப்புகூட்டத் தொடரிலாவது அப்படி ஏதாவது செய்து நாங்கள் பார்க்க வேண்டும், அதுதான் எங்களது ஒரே ஆசை என்றுகூறியிருந்தார்.