சிவகங்கை: கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.சிவகங்கை ஆவாரங்காடு தெருவைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம், செல்வி தம்பதியினர். இவர்களுக்கு மொத்தம் நான்குகுழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக இவர்களது வீட்டுக்கு அருகே உள்ள கோவில் குளத்தில் நீர் அதிகளவில் தேங்கியிருந்தது.அந்தக் குளத்தில் மாணிக்கத்தின் நான்கு குழந்தைகளும் குளித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மாணிக்கத்தின் மகள்களான நாடீஸ்வரி, கவிதா, அடைக்கலம் ஆகிய 3 பேரும் பரிதாபமாகமூழ்கி இறந்தனர். அவர்களது மகன் குமார் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications