For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணைய உத்தரவு எதிரொலி: விரைவில் கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் (ஆர்.டி.ஓ), தாசில்தார் ஆகியோரை இடமாற்றம்செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரவுள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள்,சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தாசில்தார்கள் வேறு வேறு தாலுகாக்களுக்கு மாற்றப்படவுள்ளனர். இருப்பினும் தாசில்தார் அந்தஸ்துக்கு கீழே உள்ள வருவாய்ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் மாற்றப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. காவல்துறையைப்பொருத்தவரை சப் இன்ஸ்பெக்டர் அளவிலிருந்து மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. விரைவில் இந்த இடமாற்றப் பணிதொடரும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X