ஓசூர் அருகே பஸ்சில் வழிப்பறி செய்த வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

ஓசூர் அருகே பஸ்சை கடத்தி கொள்ளையில் ஈடுபட்ட பெங்களூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. காரேப்பாளையம் அருகே அந்த பஸ் அதிகாலை வந்துகொண்டிருந்த போது 3 வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அதில் ஏறினர். பஸ் புறப்பட்டதும் 3 பேரில் ஒருவன் கத்தி முனையில்நடத்துனரை மிரட்டி அவர் கையில் இருந்த பணப்பையை பறித்துள்ளான்.

அந்த பணப்பையில் ரூ. 2,000 பணம் இருந்தது. கண்டக்டரிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டான். இன்னொருவாலிபர் டிரைவரை கத்தி முனையில் மிரட்டி தான் சொல்லும் வழியில் வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளான்.

இதற்குள் இன்னொரு வாலிபர் பயணிகளை மிரட்டி நகைகளை கழட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளான். ஆனால் அவர்கள்நகைகளை கழட்டி கொடுக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே பஸ் தமிழக எல்லையை கடந்து விட்டது.

இதனால் கொள்ளையர் 3 பேரும் பஸ்சை மெதுவாக ஓட்டச் சொல்லி, குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்தகொள்ளையர்களில் ஒருவனை மட்டும் பயணிகள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில்ஓப்படைத்தனர்.

கண்டக்டக்ரிடம் பணப்பையை பறித்து பிடிபட்ட அந்த வாலிபரின் பெயர் ரபீக் (வயது 20) ஆகும். மேலும் தலைமறைவான 2வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+