மிடாஸ் இயக்குநர்கள் யார்? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி
மதுரை:
மிடாஸ் மதுபானத் தொழிற்சாலையின் இயக்குநர்களில் பெரும்பாலனவர்களுக்கும், சசிகலாவுக்கும் என்ன தொடர்பு, உறவுஎன்பதை முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மிடாஸ் மதுபானத் தொழிற்சாலைக்கும், தனக்கும், தோழி சசிகலாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். என் மீது அவதூறு வழக்குத் தொடரப் போவதாகவும் அவர்கூறியுள்ளார்.நான் அவரிடம் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே கேள்வி தான். மதுபானத் தொழிற்சாலையில் உள்ள இயக்குநர்கள் பலருக்கும்,சசிகலாவுக்கும் என்ன தொடர்பு என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும். சோதனை நடத்தப்பட்ட மதுபானத்தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரான டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் மட்டுமல்ல,டி.டி.வி.தினகரின் சகலையும் ஆவார்.
அதே போல மற்ற இயக்குநர்களான கிட்டப்பா, குலோத்துங்கன், கார்த்திகேயன், ராமச்சந்திரன் ஆகியோரும் சசிகலாவின்உறவினர்கள் தான். இதை ஜெயலலிதா மறுக்க முடியுமா? இதே போல ரெய்டுக்கு உள்ளான ஆடிட்டர் நடராஜன்,
மதுரை செரினா கஞ்சா வழக்கில் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர். இப்போது அவரது வீட்டில் சோதனைநடத்தப்பட்டவுடன், அவர் உலகப் புகழ் பெற்ற ஆடிட்டர் என்று ஜெயலலிதா அலறுவது ஏன் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications