For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி ரேஷன் கடையில் பெரும் நெரிசல்: போலீஸ் தடியடி

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே ரேஷன் கடையில் பெரும் கூட்டம் கூடி நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் போலீஸார் நடத்தியதடியடியில் பலர் காயமடைந்தனர்.

சென்னை வியாசர்பாடி மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய இடங்களில் மழை, வெள்ள நிவாரணம் பெற காத்திருந்த மக்களிடையேகூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகம்முழுவதும் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில் திருச்சி உறையூர் அருகே உள்ள சோழராஜபுரத்தில் 13 ரேஷன் கடைகளுக்குட்பட்ட மக்களுக்குமழை நிவாரண நதி இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மக்கள் சம்பந்தப்பட்ட மண்ணெண்ணை வழங்கும் இடத்தில் கூடினர். ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில்கூடியதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மண்ணெண்ணை வாங்க மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைந்து போகச்செய்தனர். இந்த தடியடியில் சிலர் காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X