தியாகராஜ ஆராதனை விழா நிறைவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா நேற்று நிறைவடைந்தது.திருவையாறில் தியாகராஜரின் 159வது ஆராதனை விழா கடந்த 16ம் தேதி துவங்கி நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கானஇசைக்கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.
கடந்த 19ம் தேதி காலை ஒரே மேடையில் வாய்ப்பாட்டு, மிருதங்கம், நாதஸ்வரம், புல்லாங்குழல், தவில் என பல்வேறு இசைவடிவில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்றாக அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்து தியாகராஜருக்குஇசையஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரவிலும் பல இசைக்கலைஞர்கள் இசைத்தனர்.
விழாவின் நிறைவு நாளான நேற்று பல்வேறு இசை நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆஞ்சநேய உத்ஸவத்துடன் தியாகராஜ ஆராதனைவிழா நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications