கட்சி விளம்பர போர்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு
சென்னை:
அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களின்போது வைக்கப்படும் பேனர்கள், தட்டிகள் உள்ளிட்டவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகள்விதிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் அரசுக்கு சில கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்துள்ளனர்.அதன்படி, பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாகத்தான் விளம்பர பலகைஅல்லது தட்டியை வைக்க வேண்டும்.நிகழ்ச்சி முடிந்த 2 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பலகைகள், தட்டிகளை அகற்றி விட வேண்டும்.
எந்த ஒரு தனி நபர், சாதி அல்லது சமுதாயத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில், விளம்பரப் பலகைகள், தட்டிகள்வைக்கப்படக் கூடாது.
தட்டிகளுக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவை அகற்றப்படா விட்டால் அபராதம்விதிக்கப்படும் என புதிய கட்டுப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27ல் வரைவு வாக்காளர் பட்டியல்:
இதற்கிடையே தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
சட்டசபைத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாகநடந்து வருகின்றன.
வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில்ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது நிரம்பிய வாக்காளர்களையும் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வாக்காளர்பட்டியலை அச்சடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வரைவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு சில நாட்கள் வைக்கப்படும். அதில் குற்றம், குறை இருந்தால் தேர்தல்ஆணையத்திற்குத் தெரிவித்து சரி செய்து கொள்ளலாம். பெயர் விடுபட்டவர்கள் பெயர்களைச் சேர்க்கலாம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான பெயர்கள் விடுபட்டுப் போனதால் பெரும் பிரச்சனை உருவானது. இதனால்இம்முறை பிழை இல்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் அலுவலகத்திற்கு, தலைமைத்தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.