பெங்களூர் தாக்குதல்: மேலும் 2 தீவிரவாதிகள் கைது
பெங்களூர்:
பெங்களூர் இந்திய அறிவியல் கழக வளாகத்தில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 தீவிரவாதிகளைபோலீசார் கைது செய்துள்ளனர். இது வரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 6 ஆகஉயர்ந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:கோலார் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்த நிஜாமுதின் என்கிற முன்னா (வயது 24), நூருல்லா கான் (வயது 25) ஆகிய 2 பேரும்ஹெசரகாட்டா என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பெங்களூர் அறிவியல் கழகவளாகத்தில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
இவர்களுடன் சேர்த்து, இது வரை கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஒருவருக்கொருவர் பெங்களூரில் பல இடங்களில் கூடிதீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிஜாமுதின், நூருல்லா ஆகியோரிடமிருந்து 2 டின் வெடிகுண்டு, ஒரு டிபன் கேரியர் வெடி குண்டு, நாட்டுத்துப்பாக்கி, 3 எலக்ட்ரிகல் டெடனேட்டர், மேலும் தனது கூட்டாளிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் கூறினர்.