புதுவை: சட்டசபை முன்பு நியமன எம்எல்ஏ உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை மாநில சட்டசபை நியமன உறுப்பினர் நா.ரா. கலைநாதன், தொகுதி மேம்பாட்டு நிதியை நியமன உறுப்பினர்களுக்கும்ஒதுக்கக் கோரி சட்டசபை முன்பு கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.புதுவை சட்டசபையில் நியமன உறுப்பினராக இருப்பவர் நா.ரா. கலைநாதன். இவர் இன்று காலை சட்டசபை முன்புகாலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நியமன உறுப்பினர்களுக்குவழங்கப்படுவதில்லை. இது அவர்களது உரிமையைப் பறிக்கும் செயல்.
எனவே நியமன உறுப்பினருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை வழங்கக் கோரி இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளேன். எனதுகோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications