நுழைவுத் தேர்வு ரத்து: சட்டம் நிறைவேறியது
சென்னை:
தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் இன்று எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன் வடிவின் மீது சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது. அதன் விவரம்:புகழேந்தி (திமுக):
நுழைவுத் தேர்வு ரத்தாவதை திமுக வரவேற்கிறது. அதே நேரத்தில் குறையில்லாமல் இதைக் கொண்டு வர வேண்டும். நாளையாராவது நீதிமன்றம் சென்றால் சட்டம் பயனில்லாமல் போய்விடும். இந்த சட்டத்தை உண்மையான நோக்கத்துக்காக கொண்டுவரவில்லை என்றார்.
ஞானசேகரன் (காங்):
நுழைவுத் தேர்வு ரத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. தொழிற் கல்விக்கு மாணவ, மாணவிகளை சேர்க்கும்போது தமிழ் வழிபயின்றவர்களுக்கு அல்லது தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில்சட்டத்தில் அளவு கோல் வைக்க வேண்டும்.
ஜி.கே. மணி (பாமக):
நுழைவுத் தேர்வு ரத்தாவதை வரவேற்கிறோம். அதே சமயத்தில் பல மாணவர்கள் சமமான மதிப்பெண்கள் எடுத்திருந்தால் பிஇ,எம்பிபிஎஸ் வகுப்புகளில் சேர, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். தமிழ்ப் பாடத்தில் அதிகமார்க் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை தரலாம்.
இப்படி சில முன்னுரிமைகளை, அளவுகோல்களை வைத்து கிராமப் பகுதி மாணவர்களை அரசு காப்பாற்ற வேண்டும்.அவர்களுக்கும் தொழிற் கல்வி வாய்ப்பு போய்ச் சேர வேண்டும்.
கல்வி அமைச்சர் சண்முகம்:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தினோம். அதை மத்திய அரசு செய்யாததால்மாநில மாணவர்கள் நலனைக் காக்க நாங்களே இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
முதல்வர் ஜெயலலிதா:
இந்த சட்டத் திருத்தத்தால் கிராமப் புற மாணவர்களின் நலன் காக்கப்படும் என்றார்.
இதையடுத்து நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications