புலிகளுக்கு வெடிபொருள் கடத்தியதாக 5 தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்களைக் கடத்தியதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் தசநாயகே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இலங்கையின் மன்னார் வளைகுடா பகுதியில் கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போதுஅந்தக் கப்பலில் 60,000க்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் இருந்தன. இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டவை.
இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தமீனவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் இலங்கை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்என்றார்.
ஆனால், இந்தத் தகவலை இந்தியத் தூதரகம் உறுதி செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்காக வெடிபொருட்களை தமிழகமீனவர்கள் கடத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று இந்தியத் தூதரகம்தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications