ஓரங்கட்டப்பட்ட பொன்னையன்-விரைவில் கல்தா
சென்னை:
கடந்த சில காலமாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிமுகவில் நம்பர் டூ லெவலில் இருந்த அமைச்சர் பொன்னையன்இப்போது ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது பொன்னையனுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. ன் இப்போது ஒதுக்கப்பட்டிருக்கிறார்.பல விவாதங்களில் பொன்னையன் தலையிட்டு ஜெயலிலதாவின் சார்பில் பேசினார்.ஆனால், இப்போதையே சட்டமன்றக் கூட்டத் தொடரில் பொன்னையனுக்கு எந்தவிதமான முக்கியத்துவத்தையும் முதல்வர் ஜெயலலிதாவழங்கவில்லை.
ஒதுக்கி வைக்கப்பட்ட பொன்னையன், பட்ஜெட்டைப் படிக்கக் கூட முன்வரவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வம் மூலமாகபொன்னையனுக்கு ஜெயலலிதா டோஸ் விட்ட பின்னரே இடைக்கால பட்ஜெட்டை படிக்க முன்வந்தார் என்றும் செய்திகள் வெளியாயின.
இந் நிலையில் அதிமுகவில் அவரது அவைத் தலைவர் பதவிக்கும் கத்தி விழும் போல் தெரிகிறது. அவரை அந்தப் பதவியில் இருந்துதூக்கிவிட்டு சபாநாயகர் காளிமுத்து அவைத் தலைவராக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு சசிகலாவின் முழு ஆசியும்இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சட்டமன்றத்தின் கடைசி கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலுக்கு முன் இனி சட்டமன்றம் கூடப் போவதில்லை. இதனால்சபாநாயகர் பதவியை விட்டு விலகுவதில் காளிமுத்துவுக்கும் சிக்கலில்லை.
சில வாரங்களுக்கு முன் பொன்னையனுக்கு போயஸ் கார்டனில் செம டோஸ் விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இதனால் அவர் போயஸ்கார்டனுக்கே போய் வாரக்கணக்கில் ஆகிவிட்டதாம்.
கட்சி மேடையில் ஏறவும், அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவும் கூட அவருக்கு வாய்மொழி தடா போடப்பட்டுள்ளதாம். எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 500 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவைத் தலைவர் என்றமுறையில், முதல் பொதுக் கூட்டத்தில் பொன்னையன் பெயர் தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், முதல் கூட்டத்தில் மட்டுமல்ல, எந்தக் கூட்டத்திலும் பொன்னையன் பெயர் இல்லை.












Click it and Unblock the Notifications