கார்த்திக் ஒரு ஏசி ரூம் அரசியல்வாதி: சந்தானம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாசும், தமிழக தலைவர் கார்த்திக்கும் சந்தித்ததுதவறு என அக் கட்சியின் எம்எல்ஏவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளருமான சந்தானம் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சந்தானத்தின் அதிமுக ஜால்ராவை பொறுக்க முடியாததால் தான் அவருக்குப் பதிலாக கார்த்திக்கை தலைவராக்கினார் பிஸ்வாஸ்.இந் நிலையில் சந்தானம் கூறுகையில்,மக்கள் அதிமுகவுடன் கூட்டு சேர ஆசைப்படும் நேரத்தில் பிஸ்வாசும் கார்த்திக்கும் கருணாநிதியை சந்தித்து தவறு, ஜீரணிக்கமுடியாதது. திமுகவுடன் கூட்டணி சேருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
எங்கள் கட்சியின் செயற்குழு வரும் 10ம் தேதி கொல்கத்தாவில் கூடுகிறது. அப்போது அதிமுகவுடன் கூட்டு சேர வலியுறுத்துவேன்.
மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த எங்கள் மக்கள் (முக்குலத்தோர் சமுதாயத்தினர்) நிம்மதியாகவாழ்வதற்கு அதிமுக தான் காரணம். ஜாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் 5 வருடமாக நிம்மதியாக வாழ அதிமுகவின்நல்லாட்சி தான் காரணம்.
அதிமுக ஆட்சி தொடர்ந்தால் தான் எங்களுக்கு பாதுகாப்பு. புரட்சித் தலைவியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
கூட்டணி விஷயத்தில் மேலிடம் வேறு முடிவெடுத்தால் நாங்கள் அதிமுகவுடன் கூட்டு என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டோம்.
கருணாநிதியின் ஏவலின்படி கார்த்திக் செயல்பட ஆரம்பித்துள்ளார். கருணாநிதி சிபாரிசில் தான் தலைவர் பதவிக்கே கார்த்திக்வந்ததாக நினைக்கிறேன். ஏசி அறையில் இருந்து கொண்டு அவரால் எப்படி கட்சி நடத்த முடியும் என்பதையும் பார்ப்போம்என்றார்.












Click it and Unblock the Notifications