எனக்கொரு தாய் இருக்கின்றார்.. ஜெ குறித்து காளிமுத்து
சென்னை:
சட்டமன்றத்தில் கடைசிக் கூட்டத் தொடரில் கடைசியாகப் பேசிய காளிமுத்து முதல்வர் ஜெயலலிதாவை வெகுவாகப்பாராட்டினார்.
காளிமுத்து பேசியதாவது:முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இப்போது வெளியிட்ட அறிவிப்புகள் தேர்தல் கால அறிவிப்புகள் அல்ல. மக்கள்நலனுக்கான அறிவிப்புகள்.
வரும் மே மாத இறுதியிலிருந்து இந்த அறிவிப்புகள் மீண்டும் தொடங்கும் (அதாவது மீண்டும் ஆட்சி அமைத்து) என்பதைஇப்போது தெரிவித்துக் கொள்கிறேன். (அதிமுகவினர் மேஜைகளைத் தட்டி வரவேற்பு)
20 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐயால் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது, நான் பதவி விலக நேரிடும் என்றுசெய்திகள் வெளியானபோது, சட்டசபையில் எழுந்து நின்று, சபாநாயகர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, எனவே அவர்பதவி விலகத் தேவையில்லை என்று முதல்வர் கூறியதை நான் என் வாழ்நாளில் பெற்ற நற்சாட்சிப் பத்திரமாக கருதுகிறேன்.இதை எனது வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்.
எனக்கொரு தாய் இருக்கின்றார்.. என்னை அவர் காக்கின்றார் என்ற எம்ஜிஆரின் பாடலை சுட்டிக் காட்டி பேசியபோதுஉணர்ச்சிவசப்பட்டிருந்தார் காளிமுத்து.
மேலும் அவர் பேசுகையில், இந்த அவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சில நேரங்களில் கோபத்தோடு சில வெறுப்புவார்த்தைகளை வெளியிடும் சூழல் எல்லாம் ஏற்பட்டது. அந்த வெறுப்பை நான் எட்டிக் காய் கசப்பாக கருதாமல், நன்மைபயக்கும் வேப்பங்காய் கசப்பாகவே கருதுகிறேன் என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சில எதிர்க் கட்சி வரிசை உறுப்பினர்களின் பெயர்களையும் சுட்டிக்காட்டி அவர்களது ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார் காளிமுத்து.
பின்னர் வெளியே வந்த காளிமுத்துவிடம், அதிமுக அவைத் தலைவராக பொறுப்பேற்கப் போகிறீர்களாமே என்று செய்தியாளர்கள்கேட்டபோது, கட்சித் தலைமைதான் அதுகுறித்து முடிவெடுக்க முடியும். கட்சித் தலைமை உத்தரவிட்டால் தலையைக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications