For Daily Alerts
Just In
காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில்ராணுவ அதிகாரி உள்பட 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தில் பூஞ் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவமுயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக எல்லை பாதுகாப்பு ராணுவத்தினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடக்க முயன்ற தீவிரவாதிகள் 7 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல் தீவிரவாதிகள் நடத்திய எதிர் தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார் என்று ராணுவ செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.
Comments
Story first published: Saturday, January 28, 2006, 5:30 [IST]