For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூதியில் 3 பேருக்கு கத்தி குத்து: வாலிபர் வெறி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பாடி பகுதியில் உள்ள மசூதியில் புகுந்த வாலிபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதில் 3 பேர் படுகாயம்அடைந்தனர்.

சென்னை பாடி பகுதியில் உள்ள மசூதியில் நேற்றிரவு தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் உள்ளே வந்தார்.தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பாய்ந்த அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தத்தொடங்கினார்.

இதில் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் கஷ்டப்பட்டு போராடி அவரை மடக்கிப் பிடித்தனர்.போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து விசாரித்தபோது கத்தியால் குத்திய நபரின் பெயர் சரவணன் என்பதுதெரிய வந்தது.

எதற்காக அவர் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை. சரவணன் மன நலம் சரியில்லாதவராக இருக்க வேண்டும் என்றுசந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X