இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்: குமரியில் கடல் கொந்தளிப்பு-கல்பாக்கத்தில் உள்வாங்கியது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

இந்தோனேசியாவின் கடல் பகுதியில் நேற்றிரவு மிக பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது.

பாண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 என்ற அளவுக்குப் பதிவானது.

இந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே கல்பாக்கத்திலும்கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிழக்குக் கடல் பகுதியில் நேற்று இரவு 10.28 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் அம்போன்உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் கீறல் விழுந்தது. மக்கள் அலறியபடி வீடுகளை விட்டும், கடல் பகுதியை விட்டும் ஓடினர்.கடலுக்கடியில் 340 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆனால், அங்கு உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நில நடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகவில்லை என்றும்அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

ஆனால், இந் நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று காலை முதல் மிகக் கடும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது.நேரம் ஆக ஆக கொந்தளிப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால் காலை 10 மணியிலிருந்து விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்குபடகு சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

விவேகானந்தர் பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் பத்திரமாக கரைக்கு மீட்கப்பட்டு வருகின்றனர். இதேபோல திருவள்ளுவர்சிலை நடை மண்டபத்தில் சிக்கியுள்ள பயணிகளை 4, 4 பேராக மீட்கப்பட்டு வருகிறார்கள்.

கடல் கொந்தளிப்பு கடுமையாக இருப்பதால், சுனாமி வருமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.

இதேபோல, கல்பாக்கத்திலும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. கடல் 30 மீட்டர் தூரத்திற்கு உள் வாங்கியுள்ளது. இதன்காரணமாக கல்பாக்கம் பகுதி மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+