சட்டசபைத் தேர்தலில் வைகோ போட்டி?
நாகர்கோவில்:
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதை அவரேசூசகமாகத் தெரிவித்தார்.
இதுவரை வைகோ ராஜ்யசபா, லோக் சபா எம்பியாகவே இருந்து வந்திருக்கிறார். சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக தனதுஅரசியல் வாழ்வை ஆரம்பித்த வைகோ நெடுங்காலமாக திமுகவின் ராஜ்யசபா எம்பியாகவே இருந்து வந்தார். தனிக் கட்சிதொடங்கிய பிறகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை.இந் நிலையில் இனிமேல் மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள வைகோ, கடந்த மக்களவைத் தேர்தலில்போட்டியிடவில்லை. தனது சிவகாசி தொகுதியை ரவிச்சந்திரனுக்கு ஒதுக்கிவிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடஅவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசியவைகோவிடம், நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உங்கள் கட்சி விரும்புகிறதே, போட்டியிடுவீர்களா? என்றுகேட்டதற்கு,
அவர்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வேன் என்று பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் தான் மதிமுக உள்ளதா என்ற கேள்விக்கு, திமுக கூட்டணியில் தான் மதிமுக நீடிக்கிறது. இதை எல்லாகூட்டங்களிலும் தெரிவிக்கிறேன் என்றார்.
மதிமுக விஐபிக்கள் நாஞ்சில் சம்பத், எல்.கணேசன் ஆகியோரின் பேச்சுக்கள் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகஉள்ளதே என்று கேட்டபோது,
கணேசன், நாஞ்சில் சம்பத் போன்றோர் சுதந்திரமான சிந்தனையாளர்கள், அவர்களது பேச்சில் இருந்து வெறும் தலையையும்,வாலையும் எடுத்துக் கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த பேச்சையும் பார்க்க வேண்டும் என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications