அண்ணா நினைவு நாள்: ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 3ம் தேதி மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.அண்ணாவின் 37வது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதாஅண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 37வது நினைவு நாளையொட்டி,பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழக பொதுச் செயலாளர்ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், கழக தோழர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications