For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேப்பாக்கத்தில் கருணாநிதி மீண்டும் போட்டியா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரை அந்தத் தொகுதிவேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை என்று சேப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கம் பகுதி திமுக மகளிர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கருணாநிதிபேசுகையில், சேப்பாக்கம் தொகுதியில் யார் வேட்பாளர் என்று தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன்அறிவித்துள்ளார். அது தவறு.

சேப்பாக்கம் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை கட்சி தான் முடிவு செய்யும். இது வரை அந்தத் தொகுதிக்குவேட்பாளரை முடிவு செய்யவில்லை. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கருணாநிதி தான் நிற்கப் போகிறார் என்றதொணியில் அன்பழகன் பேசியிருக்க வேண்டும்.

கூட்டணி சார்பில் யார் எந்தத் தொகுதியில் நிற்கிறார்களோ, அந்த சின்னத்துக்குத் தான் நமது தோழர்கள் ஓட்டுப் போட வேண்டும்.நாம் நின்றாலும், வேறு யார் நின்றாலும் கூட்டணி வேட்பாளருக்காக தீவிரமாக பாடுபட வேண்டும்.

தலைமைக் கழகம் சார்பில் இன்னும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படவில்லை. தேர்தல் பணிக்குழு கூடி யார் வேட்பாளர்கள்என்பதை முடிவு செய்யும். அண்ணா காலத்திலிருந்து இதுதான் நடைமுறையாக உள்ளது. இதை யாரும் மாற்ற முடியாது.மாற்றவும் கூடாது.

தேர்தலில் மக்கள் முன் வைக்கப்போகும் பிரச்சினை குறித்து திமுகவினர் நன்கு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X