பாமகவுக்கு ஆதரவு இல்லை: வன்னியர் சங்கங்கள் அறிவிப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை. பாமக இடம் பெறும் அணிக்கும் எங்களதுஆதரவு இல்லை என்று வன்னியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
வன்னியர் சங்கம், தமிழ் பாமக உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வன்னியர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில்நடந்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்குத் தலைமை வகித்த வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் கூறுகையில், தனது குடும்ப வளத்திற்காகவும்,மேம்பாட்டுக்காகவும் வன்னிய சமுதாயத்தைப் பயன்படுத்திக் கொண்டவர் ராமதாஸ்.
எனவே பாமகவுக்கும், ராமதாஸுக்கும் நமது ஆதரவு எப்போதும் கிடையாது. அதே போல, பாமக இடம் பெறும் அணிக்கும்நமது ஆதரவை தர மாட்டோம்.
வன்னியர் நில வாரியம் ஒன்றை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இதன் மூலம் வன்னியர்களின் கோடிக்கணக்கானசொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.
திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், சிறப்பு அழைப்பாளராக என்னைக் கூப்பிட்டார்கள். நானும் வந்தேன். மற்ற படி இங்குஎடுக்கப்பட்டமுடிவுகள் அவர்களைச் சார்ந்தவை.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூகமாக உள்ள வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் வன்னியர்களைஓரம் கட்டியே வைத்துள்ளனர். வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை, மறுக்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திலும் கூறி விட்டேன். ஆனால் இதுவரை அதற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எனக்குசமாதானம் மட்டுமே கிடைத்தது.
இருந்தாலும் எனது முயற்சிகளை நான் கைவிட மாட்டேன். வன்னிய சமூகத்திற்கு உரிய பரிகாரம் கிடைக்கும் வரை போராடப்போகிறேன். வன்னியர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கு கருணாநிதி தான் பொறுப் பேற்க வேண்டும்.
ஜி.கே.வாசனுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் தமிழகத்திலிருந்து அமைச்சராகியுள்ள காங்கிரஸ்காரர்களின் எண்ணிக்கை3 ஆக உயர்ந்துள்ளது என்று கூறிக் கொள்ளலாம்.
அதே சமயம், திமுக அமைச்சர்களின் எண்ணிக்கை 7லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்றார்திண்டிவனம் ராமமூர்த்தி.