மக்கள் பிடித்த லஞ்ச போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை:
வாகனங்களில் சென்றவர்களை மடக்கி பணம் பறித்து, பொதுமக்களால் விரட்டிப் பிடிக்கப்பட்ட 2 போலீஸார் பணி இடை நீக்கம்செய்யப்பட்டனர்.
சென்னை ஆலந்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்என்பவரும், காவலர் தாமோதரன் என்பவரும் வாகனங்களை மடக்கி நிறுத்தி கட்டாய வசூலில் ஈடுபட்டனர். இதைப் பார்த்தபொதுமக்கள் அவர்களை தட்டிக் கேட்டனர்.
மக்கள் கூட்டத்தைப் பார்த்த இரு போலீஸாரும் தப்பிப் பிழைத்து ஓடினர். அவர்களை விடாமல் துரத்திய பொதுமக்கள் சப்இன்ஸ்பெக்டரைப் பிடித்து பரங்கிமலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தாமோதரனை போலீஸார் வலைவீசிப் பிடித்தனர்.
இருவரிடமிருந்தும் ரூ. 2000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் பணி இடைநீக்கம் செய்து இணை ஆணையர் மாஹாளி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications