குமரியில் இன்றும் கடல் கொந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடலில் 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இரண்டு சனிக்கிழமை அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி கடல் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான கடல் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால்சுனாமி தாக்குதல் ஏற்படுமோ என்று மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமையும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் கொந்தளிப்புகாரணமாக விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகுப் போக்குவரத்து நடத்தப்பட்டது. திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்குபடகு சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இது வழக்கமான கடல் சீற்றம் தான் என்று கூறப்பட்டாலும் கூட சுனாமி தாக்குதல் ஏற்படக் கூடுமோ என்ற பீதியில் குமரிமக்களும், குமரிக்கு சுற்றுலா வந்தவர்களும் பீதியுடன் காணப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications